உக்ரைன் -ரஷியா போரால் இந்தியாவுக்கு இப்படியொரு நன்மை!

உலக நாடுகளின் அறிவுறுத்தல், விருப்பம், வேண்டுகோளை தாண்டி உக்ரைன் -ரஷியா இடையே கடந்த 10 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது.

எங்கே இந்த போர் எங்கே மூன்றாம் உலகப் போருக்கு கொண்டு போய் விட்டுவிடுமோ என்று உலக நாடுகள் அஞ்சி கொண்டிருக்க, எந்த தீமைக்குள் ஒரு நன்மை உண்டு என்பது போல, உக்ரைன் -ரஷியா போர் காரணமா இந்தியாவுக்கு மறைமுகமாக ஓர் நன்மை நிகழ வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, உக்ரைனில் டிஜிட்டல் துறையில் சுமார் 30 ஆயிரம் பேரும், பன்னாட்டு வர்த்தக சேவை துறையில் 20 ஆயிரம் ஐ.டி ஊழியர்களும் பணியாற்றி வந்தனர்.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு!

இதே போன்று
பெலாரஸ்
மற்றும் ரஷியாவில் டிஜிட்டல் மற்றும் வர்த்தக துறைகளில் சுமார் 40 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர் உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அவற்றின் அண்டை நாடுகளில் சுமார் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ஐடி பணியிடங்கள் உள்ளன.

உக்ரைன் மீதான போர் காரணமாக, ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது அமெரிக்கா, அதன் தோழமை நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

இதன் விளைவாக இந்த நாடுகளில் ஐடி துறை வேவை வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும், ரஷியா, பெலாரஸ் மற்றும் உக்ரைன் நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த ஐடி பணிகளில் 70 சதவீத வேலைகள் இந்தியாவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தனியார் நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொருளாதார தடை காரணமாக ஐ.டி துறை கடுமையாக பாதிக்கப்படும்

அதேசமயம், உக்ரைன் -ரஷியா போர் மேலும் உக்கிரமடைந்தால், விலைவாசி உயர்வின் விளைவாக ஐடி சேவைக் கட்டணங்களும் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.