மீண்டும் இணையும் ஜெயம் ரவி – நயன்தாரா! இந்தப் புதிய படத்தில் என்ன ஸ்பெஷல்?

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம், ‘பூமி’. அதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பின், ‘பூலோகம்’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ‘அகிலன்’ என்ற ஆக்‌ஷன் படத்தையும் முடித்திருக்கிறார்.

ஜெயம் ரவி

இதற்கிடையில் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் அகமத் இயக்கத்தில் டாப்ஸியுடன் ‘ஜன கண மன’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். படத்தின் இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்திருந்த நிலையில், கோவிட் காரணமாக மீதமுள்ள போர்ஷனை தொடரமுடியவில்லை. காரணம், படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில்தான். அதனால், அந்தப் படம் பாதியில் நிற்கிறது.

இப்போது அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு அகமது மற்றொரு படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு போலீஸ் கதாபாத்திரம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவி – நயன்தாரா இப்படத்தில் இணைகிறார்கள். படத்தில் உள்ள மொத்த எமோஷனும் நயன்தாராவை சுற்றி இருக்கும் என்கிறார்கள்.

விஜய் சேதுபதி, நயன்தாரா

அடுத்த மாதத்தில் இருந்து இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகிறது. இதனை ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டு, ‘ஜன கண மன’ படத்தின் மீதமுள்ள பகுதிகளை எடுக்க பல்கேரியா செல்லவிருக்கிறார்கள். இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி.

நயன்தாராவின் கைவசம், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ட்ரீம் வாரியர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படம், அட்லி – ஷாரூக் கான் படம், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ப்ரித்விராஜுடன் ‘கோல்டு’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘காட்ஃபாதர்’, தன்னுடைய தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ‘கனெக்ட்’ உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.