உக்ரைன் நிலவரம் – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை <!– உக்ரைன் நிலவரம் – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை –>

உக்ரைன் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஜெய்சங்கர், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பது குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.