ரஷியா படையெடுக்கலாம் என அச்சம்: ஐரோப்பிய யூனியனில் சேர விண்ணப்பித்த முன்னாள் சோவியத் நாடுகள்

முனிச்,
 
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். 
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.

உக்ரைனை கைப்பற்றும்பட்சத்தில் தனது நாட்டின் எல்லையில் உள்ள பிற நாடுகளிலும் ரஷியா இதுபோன்ற படையெடுப்பை நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ அமைப்பில் சேராத முன்னாள் சோவியத் நாடுகள் மீது ரஷியா படையெடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றன.
ரஷியா எல்லையில் ஜார்ஜியா மற்றும் உக்ரைனின் எல்லையில் உள்ள மால்டோவா ஆகிய இரு முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 
இந்நிலையில், ஜார்ஜியா மற்றும் மால்டோவா ஆகிய இரு முன்னாள் சோவியத் நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் சேர இன்று விண்ணப்பித்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் ஜார்ஜியா, மால்டோவா சேரும் பட்சத்தில் இந்த இரு நாடுகளுக்கும் ரஷியாவின் படையெடுப்பில் இருந்து குறைந்தபட்ச பாதுகாப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் சேர உக்ரைனும் விண்ணப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.