இலங்கைக்கு கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல் – 7 பேர் கைது <!– இலங்கைக்கு கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல் – 7 பேர் … –>

தூத்துக்குடியில் இருந்து கடல்வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்த முயன்ற 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வெள்ளப்பட்டி கடற்கரையில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, விரைந்து சென்ற போலீசார் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கைப்பற்றினர்.

மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், 3 இருசக்கர வாகனம் மற்றும் 9 செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல, விவேகானந்தா காலனி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 2 படகுகளில், 550 கிலோ ஏலக்காய் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

படகுகளுடன் சேர்த்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ஏலக்காயை பறிமுதல் செய்த போலீசார், இதில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.