புடின் பைத்தியம் பிடித்தவர்! வெளியான கருத்துக்கணிப்பு



ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரித்தானியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்த உத்தரவிடும் அளவுக்கு பைத்தியம் பிடித்தவர் என்று ஐந்தில் மூன்று பேர் அஞ்சுவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, ரஷ்யா மீது இதுவரை விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் ஆட்சியைத் தண்டிக்கும் அளவுக்குப் போகவில்லை என்று பெரும்பான்மையானவர்கள் கூறுகின்றனர்.

மேலும் பிரித்தானியாவில் வசிக்கும் கிரெம்ளின் மற்றும் ரஷ்ய தன்னலக்குழுக்கள் மீது மிகவும் வலுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கும் மேற்பட் பிரித்தானியர்கள் விரும்புகிறார்கள்.

கிழக்குப் போர்முனையில் உள்ள உக்ரேனியப் போராளிகள் மற்றும் நேட்டோ நாடுகளுக்கு உதவ இன்னும் அதிகமான இராணுவ ஆயுதங்களை அனுப்பப்படுவதைக் காண அவர்கள் ஆர்வமாக உள்ளனர் .

53 சதவீதம் பேர் இதுவரை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால் புடின் ஆட்சிக்கு எதிராக இன்னும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனிடையே, பிரித்தானியா மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அணு ஆயுதத்தை வீசலாம் என்றும் அப்படி ஒரு நிலைக்கு பிரித்தானியா முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பால் இங்க்ராம் எச்சரித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.