நாகை: ஆக்ரோஷம் காட்டிய கடல் அலைகள்; அச்சத்தில் மக்கள்

நாகை அருகே மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் கடலையொட்டி அமைந்திருக்கும் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடலையே வாழ்வாதாரமாக கொண்ட இப்பகுதி மக்களுக்கு, அதுவே ஆபத்தாக வந்து நிற்கிறது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, கடலில் 5 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி ஆக்ரோஷம் காட்டியது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதியையொட்டிய கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. ஊருக்குள் கடல்நீர் புகுந்துவிடும் என்ற அச்சத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். எனவே பாதிப்புகளை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
image
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 500 மீட்டர் தூரத்துக்கு குடியிருப்பு பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 40 வீடுகள், 150 தென்னை மரங்கள் அலையில் இழுத்துச்செல்லப்பட்டதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பாதிப்பு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தடுப்பு சுவர் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அவர் உறுதிஅளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.