இந்தியா – சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை வருகிற 11-ந் தேதி நடைபெறும் என அறிவிப்பு

கிழக்கு லடாக் பகுதியில் பதற்றத்தை தணிக்க, இந்தியா – சீனா இடையே 15ஆவது சுற்று பேச்சுவார்த்தை வருகிற 11-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

கடைசியாக ஜனவரியில் இரு நாடுகள் இடையே 14ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சுமூக முடிவு எட்டப்படாததால் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வருகிற 11-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.