உக்ரைன் : சுமி நகரில் வசித்த 694 இந்திய மாணவர்களும் போல்டவா வந்தனர்

டில்லி

க்ரைன் நாட்டில் உள்ள சுமி நகரில் வசித்த 694 இந்திய மாணவர்களும் இன்று போல்டவாவுக்கு வந்துள்ளனர்.

இன்றுடன் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து 13வது நாளாக நீடித்து வருகிறது. இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  இவர்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன.

இந்தியர்கள் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி 22தேதியில் இருந்து தொடங்கிய மீட்பு பணியில் நேற்றுவரை 17,400க்கும் கூடுதலானோர் நாட்டுக்குத் திரும்பி அழைத்து வரப்பட்டு உள்ளனர் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவித்து இருந்தது.

உக்ரைனில் உள்ள சுமி நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மீட்பு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி,  நேற்று இரவு நான் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசினேன்.  சுமி நகரில்  வசித்து வந்த 694 இந்திய மாணவர்களும்  இன்று  போல்டவா நகருக்குப் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.