சரக்கு ஆட்டோ மீது மோதிய இருசக்கர வாகனம்… 4 பேர் பரிதாப பலி..!

சாலை விபத்தில் குழந்தை உட்பட நால்வர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேற்ந்த  குமரேசன் அவரது மனைவி ஆனந்தி ஆகியோரும், முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கோவையில் இருந்து மணப்பாறை நோக்கி  சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு ஆட்டோ  நேரகாக அந்த இருசக்கர வாகனங்களின் மீது மோதியது. இந்த விபத்தில், குமரேசன், முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்துகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.