மாடல் அழகியான பலுான் வியாபாரி| Dinamalar

திருவனந்தபுரம்:கேரளாவில், பலுான் விற்பனை செய்து வந்த இளம்பெண், ‘மாடல்’ அழகியாக மாறியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கண்ணுார் மாவட்டத்தில் உள்ள ஆண்டலுார் காவு கோவிலில், கடந்த ஜனவரி 17ம் தேதி திருவிழா நடந்தது.திருவிழாவை படம் எடுக்க வந்த அர்ஜுன் கிருஷ்ணன் என்ற புகைப்பட கலைஞர், கிஷ்பு என்ற இளம்பெண் ஒருவர், சாலையோரம் பலுான்கள் விற்பதை பார்த்துள்ளார்.

கிஷ்புவை பார்த்து வியந்த அர்ஜுன், அவரை ஒரு மாடல் அழகியாக மாற்ற முடிவு செய்தார். பின், அவர் தாயின் அனுமதியுடன், ஒப்பனை கலைஞர் ரம்யா பிரஜூல் உதவியுடன், கிஷ்புவுக்கு ஆடை அலங்காரம் செய்யப்பட்டது. பின், கிஷ்புவை வைத்து, பல புகைப்படங்களை அர்ஜுன் எடுத்துஉள்ளார்.அந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ஆயிரக்கணக்கானோர் அவற்றை பகிர்ந்து, அர்ஜுன் கிருஷ்ணனை பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் கேரளாவில் கூலி வேலை செய்து வந்த 60 வயது தொழிலாளி, ‘கோட் – சூட்’ விளம்பர மாடலாக மாறி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.