இந்தியாவில் புதிதாக 4 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 4ஆயிரத்து 184 பேர் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 104 பேர் இறந்துள்ளனர். இதில் இந்திய மாநிலமான கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 88 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 இலட்சத்து 15ஆயிரம்து 459 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4Mapuj;J 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளdu;. இதில் அதிகபட்சமாக கேரளாவில் புதிதாக 1,421 பேருக்கு தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு 4 கோடியே 29 இலட்சத்து 80 ஆயிரத்து 67 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 104 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 88 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 இலட்சத்து15 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6 ஆயிரத்து 554 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 24 இலட்சத்து 20 ஆயிரத்து 120 ஆக உயர்ந்தள்ளது.

தற்போது 44ஆயிரத்து 488 பேர் தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 2 ஆயிரத்து 474 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 179 கோடியே 53 இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 18 இலட்சத்து 23 ஆயிரத்து 329 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 8 இலட்சத்து,73ஆயிரத்து,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 77.60 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.