இஸ்ரேலை பழிவாங்க சபதம் எடுத்த ஈரான்| Dinamalar

டெஹ்ரான் : மத்திய கிழக்கு நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மீது சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் பாதுகாப்பு படை அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கைக்கு ஈரான் வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எங்கள் ராணுவ கர்னல்கள் இருவர் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. இதற்கு நாங்கள் தக்க பதிலடி தருவோம். எங்களுக்கு ஏற்படுத்திய இழப்பின் பலனை அவர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.