செல்வராகவன் – சோனியா அகர்வால் பிரிவிற்கு இவர்தான் காரணமா? உருட்டா இருந்தாலும் நல்லா இருக்குயா..!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகளின் மூலம் கவனம் ஈர்த்தவர் செல்வராகவன்.
காதல் கொண்டேன்
படத்தின் மூலம் இயக்குனராக முத்திரை பதித்த
செல்வராகவன்
அதைத்தொடர்ந்து புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தரமான படங்களை இயக்கினார்.

தனுஷ்
என்பவருக்குள் இருக்கும் நடிகரை வெளிகொண்டுவந்தவர் செல்வராகவன் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் தனுஷிற்கு தீனிபோட்டது. தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கிவருகிறார் செல்வராகவன். விறுவிறுப்பாக உருவாகிவரும் இப்படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ளது.

மீண்டும் சர்ச்சைகளில் சிக்கும் சிம்பு..குழப்பத்தில் ரசிகர்கள்..!

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தை இயக்கியபோது அப்படத்தில் நாயகியாக நடித்த சோனியா அகர்வாலுடன் காதல் கொண்டார். இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க 2006 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது.

அதன் பின் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2010 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். இவர்கள் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு புது காரணம் இணையத்தில் பரவி வருகின்றது. அதாவது செல்வராகவனுடன் ஒரு நடிகை மிகவும் நெருக்கமாக இருந்ததே இவர்கள் பிரிய காரணம் என ஒரு தகவல் வந்துள்ளன.

திருமணத்திற்கு முன்பு பழகி வந்த செல்வராகவனும் அந்த நடிகையும் திருமணத்திற்கு பிறகும் நெருக்கம் காட்டினார்களாம். மேலும் சுற்றுலா செல்வது, மணிக்கணக்கில் போனில் உரையாடுவது என இவர்களது பழக்கம் தொடர்ந்ததாம். இந்த விஷயம் சோனியா அகர்வாலின் காதுக்கு செல்ல பிரச்சனை ஆரம்பமானது.

ஒரு கட்டத்தில் இது சரிப்பட்டு வராது என முடிவெடுத்த
சோனியா அகர்வால்
செல்வராகவனை பிரிந்தார். இருவரும் முறைப்படி 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை விமர்சனம்; அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.