வாழ்நாளில் பாதியை சுந்தர்.சிக்கு கொடுத்து விட்டேன்: 22வது திருமண நாளில் குஷ்பு நெகிழ்ச்சி

வாழ்நாளில் பாதியை சுந்தர்.சிக்கு கொடுத்து விட்டேன்: 22வது திருமண நாளில் குஷ்பு நெகிழ்ச்சி

வாழ்நாளில் பாதியை சுந்தர்.சிக்கு கொடுத்து விட்டேன்: 22வது திருமண நாளில் குஷ்பு நெகிழ்ச்சி

3/10/2022 2:32:25 PM

நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை குஷ்புவும் சுந்தர்சியும் தங்களின் 22வது திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடினர். திருமண நாளை முன்னிட்டு குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து ” அன்றிலிருந்து இன்று வரை என் வாழ்நாளில் பாதியை உங்களுடன் கழித்திருக்கிறேன்.

இதற்கு மேல் எதுவும் கேட்டிருக்க முடியாது. இங்கே நாங்கள் எங்கள் 22 வது திருமண நாளைக் கொண்டாடுகிறோம். உங்களை காதலிக்கிறேன். உங்களுடனான வாழ்க்கை மகிழ்ச்சியானது. திருமண நாள் வாழ்த்துகள், இன்னும் பல ஆண்டுகள் திருமண வாழ்த்து சொல்ல வேண்டும்” இவ்வாறு நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.