46 தொகுதிகளை கோட்டை விட்ட பாஜக – கடுப்பான பிரதமர் மோடி!

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்தர பிரதேச மாநிலம் தான். இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் கட்சி தான், மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை அலங்கரிக்கும்.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடித்து விட்டால், மத்தியில் ஆட்சியை எளிதில் பிடித்து விடலாம் என்ற எழுதப்படாத விதி உள்ளதால் அரசியல் கட்சிகள் கடுமையாக தேர்தலில் மல்லுக்கட்டும். உத்தர பிரதேச மாநிலத்தில், 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் கடந்த 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக – அகிலேஷ் யாதவுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது.

இந்நிலையில் இன்று, உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இருந்தே ஆளும் பாஜக முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய முன்னிலை நிலவரப்படி, மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆளும் பாஜக, 276 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, 120 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கிட்டத்தட்ட உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையப் போவது உறுதியாகி உள்ளது. எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைக் காட்டிலும் பாஜக பெரிய சரிவைக் கண்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 322 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

வெறும் 42 தொகுதிகளில் மட்டுமே சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது. ஆனால் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 276 தொகுதிகளில் மட்டுமே பாஜக முன்னிலையில் உள்ளது. இது கடந்த தேர்தலில் 322 இடங்களை கைப்பற்றிய பாஜக தற்போது 276 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கடந்த தேர்தலைக் காட்டிலும் 64 தொகுதிகளில் கூடுதலாக முன்னிலையில் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.