ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு புடின் அழைப்பு| Dinamalar

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனில் நடத்தி வரும் ரஷ்ய ராணுவத்துடன் சில போராளிகளை சேர்க்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி போரில் பங்கேற்க ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பினர் சேரலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.