திருக்குறள் கூறி உரையை தொடங்கிய நிதி அமைச்சர்.. ஆந்திராவில் திருவள்ளூவர் புகழ்.!

ஆந்திர மாநில சட்டசபையில் நிதியமைச்சர் திருக்குறளை கூறி தனது உரையை தொடங்கியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில நிதியமைச்சர் ராஜேந்திர நாகிரெட்டி அவர்கள் இன்று தனது தனது உரையை தொடங்கியபோது திருக்குறளை கூறி தனது உரையை தொடங்கியுள்ளார். செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு திருக்குறளை கூறிய அவர் அதன்பின் சட்டப்பேரவையில் தனது உரையை தொடங்கியுள்ளார்.

மேலும், திருவள்ளுவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச் சிறந்த கவிஞர் என்றும் அவர் புகழ்ந்துள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் உள்ள சட்டசபையில் திருவள்ளுவரின் திருக்குறள் ஒலித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.