பாலா இதனால் தான் திருமணம் செய்துகொண்டாரா ? தீயாய் பரவும் தகவல்..!

தனுஷ்
மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பேச்சே இன்னும் ஓயாத நிலையில் தற்போது இயக்குனர் பாலாவும் விவாகரத்து செய்துள்ளார்.
சேது
படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான
பாலா
தன் முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப்பார்க்க செய்தார்.

சேது படத்தின் மெகாஹிட் வெற்றியை தொடர்ந்து பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற தரமான படங்களை இயக்கினார் பாலா. இதுவரை ஆறு தேசிய விருதுகளை தட்டிச்சென்ற இவரது படங்கள் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளது.

எதற்கும் துணிந்தவன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? வெளியான விவரம்..!

இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பாலா பல படங்களை தயாரித்து வருகின்றார். இவர் கடைசியாக இயக்கிய வர்மா படம் சரியாக இயக்கவில்லை என்ற காரணத்தால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக தான் யார் என்று நிரூபிக்கும் தருணத்தில் உள்ளார் பாலா.

பாலா

எனவே அடுத்து இவர் சூர்யாவை வைத்து இயக்கம் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றி பதிலடி கொடுக்க முயற்சித்து வருகிறார் பாலா. இந்நிலையில் தற்போது பாலா மற்றும் அவரது மனைவி பிரிந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். இருப்பினும் சில நாட்களுக்கு முன்புதான் முறைப்படி விவாகரத்தை பெற்று பிரிந்தனர். இவர்கள் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக ஒரு காரணம் சமூகத்தளங்களில் பரவிவருகிறது.

பாலா

அதாவது சினிமாவே வாழ்க்கை என்று வாழும் பாலாவிற்கு திருமணத்தில் நாட்டம் இல்லையாம். இருப்பினும் தன் பெற்றோர்களின் வற்புறுத்தலின் பெயரிலேயே திருமணம் செய்துகொண்டாராம்.

அதன் பிறகு சினிமாவே கதி என இவர் இருந்ததால் இவருக்கும் இவர் மனைவிக்கும் பலப்பிரச்சனைகள் உருவானதாம். எனவே இவர்கள் விவாகரத்திற்கு இதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சால்ட் & பெப்பர் தாடியும், காதில் கடுக்கனும்’ அஜித்தின் நியூ லுக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.