போரில் தோற்றதாக ரஷ்யாவிடம் சரணடைகிறதா உக்ரைன்? வெளியான முக்கிய தகவல்


நான்காவது முறையாக போர் தொடர்பில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 24-ம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவின் பேரில் உக்ரைனில் ரஷ்யப் படையினர் தொடங்கிய போர் 15-வது நாளாக தொடர்கிறது.
பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தாலும் ரஷ்யா அடங்க மறுக்கிறது.

போர் நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் மூன்று முறை உக்ரைனும், ரஷ்யாவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பிலிருந்து சுமுகமான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், நான்காவது முறையாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இது குறித்து பேசிய குலேபா, பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

உக்ரைன் சரணடையுமா என கேட்கிறீர்கள். உக்ரைன் சரணடையவில்லை, சரணடையாது என்பதை நான் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். அதற்கான முடிவுகளைத் தேடுகிறோம் என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.