ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் விமானி பலி- மற்றொருவர் படுகாயம்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் உள்ள பரௌம் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பனி படர்ந்த பகுதிக்குள் பறந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

விபத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டருக்குள் இருந்தவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் பயணித்தது தெரியவந்தது. இதில் ஒரு விமானி உயிரிழந்ததாகவும், மற்றொரு விமானி படுகாயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த விமானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்..
பா.ஜனதா வெற்றிக்கு உதவிய மாயாவதி, ஓவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா வழங்க வேண்டும்: சஞ்சய் ராவத்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.