வெப்சீரிஸ்-க்காக பார்வதியுடன் இணைந்த பிரியா பவானி சங்கர்

யாவரும் நலம், சூர்யா நடித்த 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். தற்போது தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் தேங்க்யூ என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டவர், மீண்டும் அதே நாகசைதன்யாவுடன் கைகோர்த்து வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார். இதில் நாகசைதன்யா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது..

இந்த வெப்சீரிஸில் கதாநாயகியாக ஏற்கனவே நடிகை பார்வதி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் தற்போது பிரியா பவானி சங்கரும் இந்த படத்தில் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இயக்குனர் விக்ரம் குமார் உடன் நட்சத்திரங்கள் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் ஒரு ரசிகையாக பார்வதியுடன் பிரியா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.