உங்க தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமா? சில அசத்தலான குறிப்புகள்


பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான்.  

இப்போது, ​​சந்தையில் கிடைக்கும் பல தலைமுடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வை நிச்சயமாகக் காண முடியும்.ஆனால் அவை அனைத்தும் தற்காலிக தீர்வாகவே இருக்கும். 

அந்தவகையில் தற்போது தலைமுடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைத்திருக்க என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

  • நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
  • காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
  • அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
  • செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
  • தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும். முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
  • கரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
     

  • நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.