ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை

துபாய்:சவுதி அரேபியாவில் கொலை கொள்ளை பயங்கரவாத ஆதரவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவுதி அரேபியாவில் கடுமையான குற்றங்களுக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.இந்நிலையில் சவுதி அரசு பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோரை கொலை செய்தோர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தோர் ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 81 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது.

மரண தண்டனை எப்படி நிறைவேற்றப்பட்டது என்ற விபரத்தை வெளியிடவில்லை.1979ல் மெக்கா மசூதியை கைப்பற்றிய பயங்கரவாதிகள் 63 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை விட அதிகமானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.