மதுரை: குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர் சரக்கு வாகனம் மீது மோதி விபத்து.!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

வாடிப்பட்டி குமரன் நர்சரி கார்டன் பகுதியை சேர்ந்த குருசாமி என்பவர் சரக்கு வாகனத்தை ஒட்டி சென்று  மதுரை-வாடிப்பட்டி நான்குவழிச்சாலையை கடப்பதற்காக சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து  மதுரை நோக்கி பல்சர் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த அருண் என்ற இளைஞர் சரக்கு வாகனத்தின் பின்னால் பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.