டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை திறந்து வைப்பதற்காக டெல்லி செல்லவுள்ளார் முதலமைச்சர்

தலைநகர் டெல்லியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் உள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் இந்தக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக மு.க.ஸ்டாலின் 3வது முறையாக டெல்லி செல்ல உள்ளார்.

இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி ,ராகுல் காந்தி , மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.