எஸ்.ஜே. சூர்யா வாழ்க்கையை மாற்றிய ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் இயக்கியிருக்கும்
பயணி
பாடல் வீடியோவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவும் ஐஸ்வர்யாவும் வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் சொன்ன ஒரு விஷயம் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.

ஐஸ்வர்யாவின் வை ராஜா வை படத்தில் கவுரவத் தோற்றத்தில் ஒரு பாடலில் வந்திருந்தார் எஸ்.ஜே. சூர்யா. என்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் துவங்கியதே அந்த பாடலில் இருந்து தான். அதற்காக நான் ஐஸ்வர்யாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யாவுக்கு நல்லது நடக்க ஐஸ்வர்யா காரணமாக இருந்ததை அறிந்த ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யாவை எஸ்.ஜே. சூர்யா மனதார பாராட்டிய விதம் குறித்தும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மார்ச் 11ம் தேதி ஓடிடியில் வெளியான மாறன் படத்தை பார்த்துவிட்டீர்களா அண்ணி என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Aishwarya Rajinikanth:ஐஸ்வர்யாவை பற்றி எனக்கு அப்பவே தெரியும்: சொன்னது யார்னு பாருங்க
ஐஸ்வர்யாவை பாராட்டி சுஹாசினி மணிரத்னம் பேசிய வீடியோ வைரலாகிவிட்டது. ஐஸ்வர்யா ஒரு திறமைசாலி என்பது அவர் சிறுமியாக இருந்தபோதே தெரியும் என கூறியுள்ளார் சுஹாசினி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.