கனடாவில் சோகம் – சாலை விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் 5 பேர் பலி

டொரன்டோ:
கனடாவின் டொரண்டோ பகுதியில் இந்திய மாணவர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை அண்ரு ஒரு வேனில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதியது.
இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கனடா விபத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கனடாவுக்கான இந்திய ஆணையர் அஜய் பிசாரியா உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.