அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று

வாஷிங்டன்:
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும் எனது மனைவியுமான மிச்செல் இருவரும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் எடுத்துக்கொண்டோம். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. தொற்றுகள் குறைந்தாலும்கூட நீங்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.