சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஓ.பி.எஸ்-ஸை சந்தித்த பிறகு செல்லூர் ராஜ் வெளியிட்ட தகவல்.!!

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவில்இணைப்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு எடுக்கும் என அ தி மு க-வின் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டத்தில் வெற்றி பெற்ற அதிமுகவினர் நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சந்தித்தனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் ஓ பன்னீர் செல்வத்திடம் வாழ்த்து பெற்றனர். 

அதன்பிறகு செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மதுரை பகுதி அதிமுகவினர் இன்று (நேற்று) ஒருங்கிணைப்பாளர் உடன் வாழ்த்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து நாளை(இன்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். அதிமுகவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இணைப்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.