நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இத்திட்டத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் சம்பல், கொட்டக்குடி ஆகிய ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நியூட்ரினோ திட்டத்திற்காக ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு சுரங்கம் தோண்டப்பட உள்ளதால், பாறைகள் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், இத்திட்டத்தை கைவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.