போலீசாரை தாக்க முற்பட்ட டீசல் திருடன் சுட்டுப்பிடிப்பு| Dinamalar

ஜிகினி : பெங்களூரு புறநகர், ஜிகனி தொழிற்பகுதியில், இரவு நேரத்தில் சாலை ஓரம் லாரிகளை நிறுத்தி, ஓட்டுனர்கள் உறங்குவது வழக்கம். அப்போது லாரிகளில் டீசலை திருடும் கும்பல் உள்ளது.நேற்று அதிகாலை, 5:30 மணியளவில் கே.இ.பி., சாலையில், லாரி நிறுத்தப்பட்டிருந்தது. டாடா சுமோவில் வந்த ௪ பேர், லாரியில் டீசல் திருட முயற்சித்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த ரோந்து போலீசார், அந்நபர்களை பிடிக்க முற்பட்ட போது, இன்ஸ்பெக்டர் சுதர்சன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, சரணடையும்படி எச்சரித்தார். அப்போதும் போலீசாரை தாக்க முற்பட்டதால், இன்ஸ்பெக்டர் சுட்டதில், சீனிவாஸ் என்ற நபரின் கால்களில், குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். அவரை போலீசார் கைது செய்து, மருத்துவமனையில் சேர்த்தனர். மல்லனகவுடா என்பவர், சிக்கினார்.மற்ற இருவரும் தப்பினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.