ராகவா லாரன்ஸை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினி

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பிறகு ஐஸ்வர்யா, அன்கித் திவாரி இசையமைப்பில் முசாபிர் என்கிற ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது ராகவா லாரன்ஸ் உடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா. அந்த சந்திப்பு குறித்த தகவலையும், புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ” சுவாரசியமான ஒன்று உருவாகிறது… என் அன்பான ராகவா லாரன்ஸ் அண்ணாவை சந்தித்த பிறகு என் மூளை துடிக்கிறது.. வொர்க்மோட் ஆன்.. எப்போது, எப்பொழுது வேண்டுமானாலும்!” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவின் மூலம் விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகலாம் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.