தரைமட்டமான பள்ளிக்கூட இடிபாடுகளுக்கிடையே ஏழு உடல்கள் கண்டெடுப்பு: உக்ரைன்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்த போதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடைபெற்று வருகிற நிலையில், மறுபக்கம் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
உக்ரைன்- ரஷியா இடையிலான வெளியுறவுத்துறை மந்திரிகள் அளவிலான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ரஷியாவின் தாக்குதல் அதிகரித்துள்ளது. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மைகோலாயிவ்வில் உள்ள பள்ளிக்கூடம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பள்ளி தரைமட்டமானது. தற்போது இடுபாடுகளை அப்புறப்படுத்தும்போது ஏழு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் எமர்ஜென்சி சர்வீஸ் தெரிவித்துள்ளது.
ரஷியா தொடர்ந்து குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.