திறமையற்ற அமைச்சர்கள் நீக்கம் முதல்வருக்கு சி.டி.ரவி வலியுறுத்தல்| Dinamalar

பெங்களூரு-”கட்சிக்கு சுமையாக உள்ளவர்களின் விஷயத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை கவனம் செலுத்த வேண்டும்,” என பா.ஜ., தேசிய முதன்மை செயலர் சி.டி.ரவி தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:பா.ஜ.,வுக்கும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட துறைகளுக்கும், நியாயமாக நடந்து கொள்ளாத, திறமையற்ற அமைச்சர்கள் விஷயத்தில், முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். கட்சிக்கு பங்களிப்பு அளிக்காதோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்சியின் துணைத்தலைவர் பதவி, சிறிய பதவியல்ல. அதை சிறிய பதவி என நினைத்தால், எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பல தொண்டர்கள், இன்று (நேற்று) என்னை சந்தித்தனர். கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு ஏற்கனவே நியமித்திருக்க வேண்டும். இதுவரை ஏன் நியமிக்கவில்லை. கட்சிக்கு பங்களிப்பு அளிக்காதோரை, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.