பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது – பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. 
இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழுவினரின் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அம்பேதகர் பவனில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் வந்தடைந்தார்.
பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிரதமர் மோடிக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 4 மாநில தேர்தலில் பா.ஜ.க.வை அபார வெற்றிபெறச் செய்ததற்காக அவர்களுக்கு இந்த கவுரவம் செய்யப்பட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடரில் பா.ஜ.க. எம்.பிக்கள் செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து பாராளுமன்ற குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.