உக்ரைனைவிட்டு 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் – ஐ.நா. அகதிகளுக்கான முகமை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.

இருப்பினும் உக்ரைனில் உள்ள நகரங்களில் இன்னும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிற்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷ்ய தாக்குதலினால் ஏராளமான பொதுமக்கள் அகதிகளாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதிகபட்சமாக போலந்தில் 18 லட்சம் பேர் புகலிடம் கேட்டு தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.