சென்னை அண்ணாநகரில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து….

சென்னை:  அண்ணாநகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. விரைந்த வந்த தீயணைப்பு துறையினர் தீயை  கட்டுக்குள் கொண்டுவந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இந்த கட்டிடத்தில் வங்கி மற்றும் தனியார் மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது..தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். அரை மணி நேரத்தில் தீ கட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில் சிக்கியிருந்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.