பான் இந்தியா திரைப்படமாக உருவெடுக்கும் சூர்யாவின் அடுத்த படம்…!

சூர்யாவின் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் முக்கியமானவர் நடிகர்
சூர்யா
. அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இருளர் பழங்குடியினர் குறித்து பேசியசூர்யா ‘ஜெய் பீம்’ படமே இதற்கு சாட்சி. இதையடுத்து சமீபத்தில் வெளியான ‘
எதற்கும் துணிந்தவன்
’ படமும் வெற்றிப்பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து தற்போது
பாலா
இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

வடிவேலுவை விளாசிய பிரபல இயக்குனர்.. சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்..!

இந்த படத்தை தொடங்குவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் எடுக்கப்பட இருக்கும் இந்த படத்தை அடுத்து
வெற்றிமாறன்
இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறார். நீண்ட நாட்களாக இந்த படத்தை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது உறுதியாக தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை 160 கோடியில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகும் இப்படம் பான் இந்தியா திரைப்படமாகவும் வெளியாகவிருக்கிறது. இந்திய அளவில் சூர்யாவிற்கு
மார்க்கெட்
உருவாக்கும் முயற்சியாக பான் இந்தியா திரைப்படமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.