உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யா மறுப்பு| Dinamalar

மாஸ்கோ : உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்க ரஷ்யா மறுத்துவிட்டது.

‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்பியது. எனினும், நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், அது தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மாதம் 24ம் தேதி, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, ரஷ்ய படையினர் உக்ரைனுக்குள் நுழைந்தனர்; குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் உக்ரைன் மீதான தாக்குதல்களை துவங்கினர்.உக்ரைனில் இனப்படுகொலை நடந்து வருவதாக குற்றஞ்சாட்டி, சர்வதேச நீதிமன்றத்தில், உக்ரைன் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று (மார்ச் 16) விசாரித்த சர்வதேச நீதிமன்றம், உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு, ரஷ்யாவுக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை ஏற்க ரஷ்யா மறுத்துவிட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.