தேவையற்ற மரங்களை அகற்றுவதில் தமிழக அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை – உயர் நீதிமன்றம்

தேவையற்ற மரங்களை அகற்றுவதில் தமிழக அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளில் நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

மரங்களை வெட்டுவதற்கான விருப்பங்களை கோரி அறிவிப்பு வெளியிட்டும், யாரும் விருப்பம் தெரிவிக்காததால் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னோடி திட்டத்தை தொடங்கவே 8 ஆண்டுகள் என்றால், மரங்களை அகற்றுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மற்றொரு வழக்கில், வனக்குற்றங்கள் தடுப்பு பிரிவை மீண்டும் அமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்க தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.