ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்க் குற்றவாளி: ஜோ பைடன்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் புதன்கிழமை (மார்ச் 16, 2022) ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை ஒரு போர்க் குற்றவாளி என்று கூறியுள்ளார்.  உக்ரைனில் போர் “திட்டமிடப்பட்ட வகையில் முன்னேறி வருவதாக” ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் இருந்து வெளியான கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.

கிரெம்ளின் படைகள் தொடர்ந்து முற்றுகையிடப்பட்ட நகரங்கள் மீது குண்டுவீச்ச்சு தாக்குதல்களை நடத்தி வருகின்றன, தலைநகர் கீவ் மீது ஷெல் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில், தியேட்டர் ஒன்றில், உணவுக்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!

ரஷ்யா பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தொடங்கிய நிலையில், உக்ரைனின் மிகப் பெரிய நகரங்கள் எதனையும் மாஸ்கோ கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு ஐரோப்பிய அரசின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும். 

ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல் காரணமாக, சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான உக்ரேனியர்கள் தப்பி ஓடிவிட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர் என  உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். 

செவ்வாயன்று ரஷ்யப் படைகள் உக்ரேனிய எல்லைக்குள் மேலும் ஊடுருவ முடியவில்லை என்றாலும், நகரங்கள் மீது கடுமையான ஷெல் தாக்குதல்கள் தொடர்ந்தன என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  கூறினார். செவ்வாயன்று 28,893 குடிமக்கள் 9 வது பாதுகாப்பான மனித வழித்தடத்தின் வழியாக தப்பித்து சென்றனர் என்றாலும், ரஷ்யா அவர்களை மரியுபோலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.