ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரத்தின் கலசம் திறந்து வைப்பு

ஹோமாகம மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரத்தின் கலசம் திறந்து வைக்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று (16) கலந்து கொண்டார்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களினால் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் கலசம் திறந்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் புதிய தாதுகோபுரத்திற்கு முதலாவது மலர் பூஜை நடத்தினார்.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ சங்க சபையின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய இத்தேபானே தம்மாலங்கார மஹாநாயக்க தேரர், மல்வத்து விகாரை பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது பங்கேற்றிருந்தனர்.

குறித்த நிகழ்வில் கௌரவ அமைச்சர் பந்துல குணவர்தன, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, லசந்த அழகியவன்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, பிரதமரின் செயலாளர் திரு.அனுர திஸாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Geethanath Kassilingam
COORDINATING SECRETARY 
THE PRIME MINISTERS OFFICE
Phone: +94112354818

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.