12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான கோர்பேவாக்ஸ் தடுப்பூசி போடும் இயக்கம்… முதல்நாளில் 2.60 லட்சம் சிறாருக்கு தடுப்பூசி.!

இந்தியாவில் 12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார்களில் இரண்டு இலட்சத்து அறுபதாயிரத்துக்கு மேற்பட்டோர் நேற்று ஒரேநாளில் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

சிறார்களில் 4 கோடியே 71 இலட்சம் பேர் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியுடையவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 2 இலட்சத்து 60 ஆயிரத்து 136 சிறார்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் 52 ஆயிரத்து 621 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.