Tamil News Today Live: இந்தியாவில் மேலும் 2,539 பேருக்கு கொரோனா

Tamil Nadu News Updates: உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றச்சாட்டி உக்ரைன் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 90 பேர் காயமடைந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி

உக்ரைனுக்கு கூடுதலாக 800 டாலர் தளவாட உதவி – ஜோ பைடன்

உக்ரைன் அமெரிக்காவிடம் உதவிகேட்ட சில மணி நேரங்களில் கூடுதலாக 800 மில்லியன் டாலர் அளவுக்கு போர் தளவாட உதவிகளை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே இதைச் செய்கிற ஒரே கட்சி பா.ம.க: டாக்டர் ராமதாஸ் பெருமிதம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 133வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல் ரூ91.43-க்கும் விற்பனையாகிறது.

உத்தேச அமைதி ஒப்பந்தம் தயார்

ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை குறித்த அமைதி ஒப்பந்தம் தயார் என தகவல் தெரிவிக்கின்றன. அமைதி உடன்பாடு ஒப்பந்தம் மூலம் உக்ரைனில் பதட்டம் தணியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Live Updates
10:59 (IST) 17 Mar 2022
ஓபிஎஸ்க்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஏற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

10:52 (IST) 17 Mar 2022
முதுநிலை படிக்காமல் Ph.Dயில் சேரலாம்

முதுநிலை பட்டம் பயிலாமல் நேரடியாக Ph.D., படிப்பில் சேரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது யுஜிசி . 4 ஆண்டுகால யூ.ஜி. படிப்பை படித்தால் பி.ஜி. பயிலாமல் நேரடியாக Ph.Dல் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

09:51 (IST) 17 Mar 2022
5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தல்

பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்பு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

09:45 (IST) 17 Mar 2022
மேலும் 2,539 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மேலும் 2,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு 30,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியாக உயர்ந்துள்ளது.

09:14 (IST) 17 Mar 2022
உலகளவில் 46.31 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில் இதுவரை 46.31 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து 39.60 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 60.79 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

08:49 (IST) 17 Mar 2022
இ-சுற்றுலா விசா தடை நீக்கம்

இந்தியா சார்பில் 156 நாடுகளுக்கு வழங்கப்படும் 5 ஆண்டு இ-சுற்றுலா விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கு வழங்கப்படும் 10 ஆண்டு கால சுற்றுலா விசாவுக்கான தடையும் நீக்கி உத்தரவு

08:26 (IST) 17 Mar 2022
குமரியில் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

கன்னியாகுமரி கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்டையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.