இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கையில் வரவேற்பு

இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்ரெக் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகை தந்துள்ளார்.

இவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் 3 உயர் அதிகாரிகளும் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான விஷேட விமானத்தில் வருகை தந்த இவர்களை அமைச்சர்களான பிரசன்ன ரனதுங்க, காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் இலங்கை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.