இரு இடங்களில் விபத்து தம்பதி உட்பட 4 பேர் பலி| Dinamalar

துமகூரு / பல்லாரி : மாநிலத்தின் இரண்டு இடங்களில் நடந்த சாலை விபத்தில் தந்தை, மகன், தம்பதி உயிரிழந்தனர்.* பல்லாரி சிரகுப்பாவின், கெஞ்சனகுட்டா அருகில், நேற்று காலை சென்ற பைக் மீது வேகமாக வந்த டிராக்டர் மோதியது. பைக்கிலிருந்த பசவராஜ், 30, அவரது மகன் கார்த்திக் நாயக், 6, உயிரிழந்தனர்.

பசவராஜின் மனைவியும், மற்றொரு மகனும் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சிரகுப்பா போலீசார் விசாரிக்கின்றனர்.* துமகூரு மதுகிரியின், கொந்திஹள்ளியின் சாம்பசிவய்யா, 73, இவரது மனைவி சங்கரம்மா, 67, நேற்று காலை பைக்கில் புறப்பட்டனர். மதுகிரியின் கவாடிகரபாளையா அருகில் வரும் போது, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் அவர்கள் சென்ற பைக் மீது மோதியது. பைக்கிலிருந்த தம்பதி உயிரிழந்தனர்.மதுகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.