தனிமையில் வாடிய முதியவர் தற்கொலை| Dinamalar

ராஜானுகுண்டே : மனைவி, மகனிடமிருந்து பிரிந்து, தனிமையில் வாழ்ந்த ஓய்வுபெற்ற ஊழியர், தற்கொலை செய்துகொண்டார்.பெங்களூரு எலஹங்கா, சிங்கநாயகனஹள்ளியில் வசித்த ராஜிவ், 62, எலஹங்காவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மனைவியர்.முதல் மனைவியிடம், விவாகரத்து பெற்ற இவர், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு மகன் உள்ளார். நான்கு மாதங்களுக்கு முன், மனைவி, மகனை பிரிந்து சென்ற அவர், சிங்கநாயகனஹள்ளியின், கோத்ரெஜ் அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.தனிமையால் வாடிய அவர், வாழ்வின் கடைசி காலத்தில் மனைவி, மகனுடன் சேர்ந்து நாட்களை கழிக்க விரும்புவதாக, தன் நண்பர்களிடம் கூறி வந்தார். இந்நிலையில் தனிமையால் மனம் வருந்திய அவர், நேற்று முன் தினம் இரவு குடியிருப்பு கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ராஜானுகுண்டே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.