இர்பின் நகரை ரஷ்யாவிடம் இருந்து மீட்டதாக உக்ரைன் நகர மேயர் தகவல்.. பதில் தாக்குதல் நடத்த தயார் என வீடியோ வெளியீடு

ரஷ்யாவிடம் இருந்து இர்பின் நகரத்தை மீட்டதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான போர் 34-வது நாளை எட்டிய நிலையில் ரஷ்யப் படைகள் பல்வேறு இடங்களில் பின்வாங்குவதாக செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில் தலைநகர் கீவ்வின் அண்டை நகரான இர்பினை ரஷ்யாவிடம் இருந்து மீட்டதாக அந்நகர மேயர் ஒலக்சாண்ட்ர் மார்குஷன் தெரிவித்துள்ளார்.

தனது சமூகவலைதள பக்கத்தில் ஒலக்சாண்டர் வெளியிட்ட வீடியோவில், ரஷ்யப் படைகளிடம் இருந்து இர்பின் நகரம் விடுவிக்கப்பட்டதாகவும், இருப்பினும் ரஷ்யப் படைகள் நடத்தும் கூடுதல் தாக்குதல்களை துணிவுடன் எதிர்கொள்வோம் என்றும் பதிவிட்டு உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.