இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு.. 4 பேரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.!

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, தென் மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார், விருதுநகர் சிபிசிஐடி காவல்நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணையை  சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கைதான 4 பேரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹரிஹரன் உறவினர்களிடம் நேற்றிரவு சிபிசிஐடி போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரிடமும், அவர்களது உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ள மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் வந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.